திருக்குறள்- குறள் 1050

குறள் எண் : 1050 துப்புர வில்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும். சாலமன் பாப்பையா உரை: உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத் துறந்து... Read more

திருக்குறள்- குறள் 1049

குறள் எண் : 1049 நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பா டரிது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது. சாலமன் பாப்பையா உரை: யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது... Read more

திருக்குறள்- குறள் 1048

குறள் எண் : 1048 இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்). சாலமன் பாப்பையா உரை: நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும்... Read more

திருக்குறள்- குறள் 1047

குறள் எண் : 1047 அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான். சாலமன் பாப்பையா உரை: நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை... Read more

திருக்குறள்- குறள் 1046

குறள் எண் : 1046 நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும். சாலமன் பாப்பையா உரை: நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை... Read more

திருக்குறள்- குறள் 1045

குறள் எண் : 1045 நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும். சாலமன் பாப்பையா உரை: இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும். கலைஞர் மு.கருணாநிதி உரை: வறுமையெனும்... Read more

திருக்குறள்- குறள் 1044

குறள் எண் : 1044 இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும். சாலமன் பாப்பையா உரை: நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச்... Read more

திருக்குறள்- குறள் 1043

குறள் எண் : 1043 தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குர வென்னும் நசை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும். சாலமன் பாப்பையா உரை: இல்லாமை என்று சொல்லப்படும் மன ஆசை எவரிடம் இருக்கிறதோ, அவரின்... Read more

திருக்குறள்- குறள் 1042

குறள் எண் : 1042 இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும். சாலமன் பாப்பையா உரை: இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க... Read more

திருக்குறள்- குறள் 1041

குறள் எண் : 1041 இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும். சாலமன் பாப்பையா உரை: இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே. கலைஞர் மு.கருணாநிதி... Read more