திருக்குறள்- குறள் 870

குறள் எண் : 870 கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லா தொளி. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கல்வி கற்காதவனைப் பகைத்துக்கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம் எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது. சாலமன் பாப்பையா உரை: நீதி நூல்களைக் கல்லாதவனைப் பகைப்பதால் கிடைக்கும் பொருள் சிறிது எனினும், அதை விரும்பாத... Read more

திருக்குறள்- குறள் 869

குறள் எண் : 869 செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும். சாலமன் பாப்பையா உரை: நீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய... Read more

திருக்குறள்- குறள் 868

குறள் எண் : 868 குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க் கினனிலனாம் ஏமாப் புடைத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும். சாலமன் பாப்பையா உரை: நல்ல குணங்கள் இல்லாமல் குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை... Read more

திருக்குறள்- குறள் 867

குறள் எண் : 867 கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும். சாலமன் பாப்பையா உரை: ஒரு செயலைத் தொடங்கி விட்டு, அதன் நலத்திற்குப் பொருந்தாதவற்றைச் செய்யும் அரசின் பகைமையைச், சிலவற்றை அழியக்... Read more

திருக்குறள்- குறள் 866

குறள் எண் : 866 காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும். சாலமன் பாப்பையா உரை: நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க,... Read more

திருக்குறள்- குறள் 865

குறள் எண் : 865 வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் <br>பண்பிலன் பற்றார்க் கினிது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான். சாலமன் பாப்பையா உரை: நீதி நூல்கள் ‌சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை... Read more

திருக்குறள்- குறள் 864

குறள் எண் : 864 நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன். சாலமன் பாப்பையா உரை: கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும்,... Read more

திருக்குறள்- குறள் 863

குறள் எண் : 863 அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன். சாலமன் பாப்பையா உரை: பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத,... Read more

திருக்குறள்- குறள் 862

குறள் எண் : 862 அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும். சாலமன் பாப்பையா உரை: மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத,... Read more

திருக்குறள்- குறள் 861

குறள் எண் : 861 வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும். சாலமன் பாப்பையா உரை: பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை... Read more