திருக்குறள்- குறள் 284

4 / 100

குறள் எண் : 284

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்….

சாலமன் பாப்பையா உரை:

அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *