திருக்குறள்- குறள் 764

11 / 100

குறள் எண் : 764

அழிவின் றறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்….

சாலமன் பாப்பையா உரை:

போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *